6
மனமாறாத இஸ்ரயேல் 
 1 வாருங்கள், நாம் யெகோவாவிடம் திரும்புவோம். 
அவர் நம்மைக் காயப்படுத்தினார், 
ஆயினும், அவரே நம்மை சுகப்படுத்துவார். 
அவர் நம்மை நொறுக்கினார், 
ஆயினும், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார். 
 2 நாம் அவருடைய சமுகத்தில் பிழைத்திருக்கும்படி 
இரண்டு நாட்களுக்குப்பின்பு அவர் நமக்குப் புத்துயிரூட்டுவார்; 
மூன்றாம் நாளிலோ நம்மை எழுப்புவார். 
 3 நாம் யெகோவாவை அறிந்துகொள்வோமாக; 
நாம் தொடர்ந்து அவரைப்பற்றி அறிய முயற்சிப்போமாக. 
சூரியன் உதிப்பது நிச்சயம்போல, 
அவர் தோன்றுவார் என்பதும் நிச்சயம். 
அவர் மழையைப்போலவும், 
பூமியை நனைக்கும் வசந்தகால மழையைப்போல் வருவார். 
 4 எப்பிராயீமே, நான் உன்னை என்ன செய்வேன்? 
யூதாவே, நான் உன்னை என்ன செய்வேன்? 
உங்களது அன்பு காலையில் தோன்றும் மேகம்போலவும், 
விடியும்போது மறைந்துபோகும் பனிபோலவும் இருக்கிறது. 
 5 அதனால்தான் நான் இறைவாக்கினர்மூலம் உங்களை வெட்டினேன்; 
என் வாயின் வார்த்தையினால் உங்களைக் கொன்றேன்; 
என் நியாயத்தீர்ப்பு உங்கள்மேல் ஒளிபோல் வெளிப்படும். 
 6 நான் பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்; 
தகன காணிக்கைகளை அல்ல, இறைவனை அறியும் அறிவையே விரும்புகிறேன். 
 7 ஆனால், ஆதாமைப்போல் அவர்கள் என் உடன்படிக்கையை மீறி, 
அங்கே எனக்கு துரோகம் பண்ணினார்கள். 
 8 கீலேயாத் கொடுமையானவர்களின் பட்டணம்; 
அது இரத்தம் தோய்ந்த அடிச்சுவடுகளால் கறைப்பட்டிருக்கிறது. 
 9 கொள்ளையர் கூட்டம் ஒருவனுக்காகப் பதுங்கிக் காத்திருப்பதுபோல, 
ஆசாரியர்களின் கூட்டமும் இருக்கிறார்கள். 
அவர்கள் சீகேமுக்குப் போகும் வழியிலே கொலைசெய்து, 
வெட்கக்கேடான குற்றங்களை செய்கிறார்கள். 
 10 இஸ்ரயேல் குடும்பத்தாரே, உங்கள் நாட்டில் கொடூரமான செயலைக் கண்டேன்; 
எப்பிராயீமோ வேசித்தனத்தில் ஈடுபட்டிருக்கிறது, 
இஸ்ரயேல் தீட்டுப்பட்டிருக்கிறது. 
 11 யூதாவே, உனக்கும் 
ஒரு அறுவடை நியமிக்கப்பட்டிருக்கிறது. 
“என் மக்களின் செல்வங்களை நான் அவர்களுக்குத் திரும்பக் கொடுக்கும்போது,