சங்கீதம் 150
 1 அல்லேலூயா, 
இறைவனை அவருடைய பரிசுத்த இடத்தில் துதியுங்கள்; 
அவருடைய வல்லமை வெளிப்படும் வானங்களில் அவரைத் துதியுங்கள். 
 2 அவருடைய வல்லமையின் செயல்களுக்காக அவரைத் துதியுங்கள்; 
இணையற்ற அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள். 
 3 எக்காள சத்தத்தோடு அவரைத் துதியுங்கள்; 
யாழோடும், வீணையோடும் அவரைத் துதியுங்கள். 
 4 தம்புராவுடன் நடனமாடி அவரைத் துதியுங்கள்; 
கம்பியிசைக் கருவிகளினாலும், புல்லாங்குழலினாலும் அவரைத் துதியுங்கள். 
 5 கைத்தாளங்களின் ஓசையுடன் அவரைத் துதியுங்கள்; 
அதிர்ந்து ஒலிக்கும் கைத்தாளங்களுடன் அவரைத் துதியுங்கள். 
 6 சுவாசமுள்ள யாவும் யெகோவாவைத் துதிப்பதாக. 
அல்லேலூயா.