சங்கீதம் 93
 1 யெகோவா ஆளுகை செய்கிறார், 
மாட்சிமையை அணிந்துகொண்டிருக்கிறார்; யெகோவா வல்லமையை அணிந்து, 
அவர் அதை வார்க்கச்சையாகக் கட்டிக்கொண்டிருக்கிறார்; 
ஆதலால் உலகம் அசையாதபடி நிலைபெற்றிருக்கிறது. 
 2 உமது சிங்காசனம் ஆரம்பம்முதல் உறுதியானது; 
நீர் என்றென்றும் இருக்கிறீர். 
 3 யெகோவாவே, நதிகள் எழும்பின; 
நதிகள் இரைச்சலிட்டு எழும்பின; 
நதிகள் அலைதிரண்டு எழும்பின. 
 4 திரளான தண்ணீர்களின் இரைச்சலைவிட, 
கடலின் வலிமையான அலைகளைவிட, யெகோவா உன்னதத்திலே வல்லமையுள்ளவர். 
 5 உமது சாட்சிகள் மிகவும் உண்மையுள்ளவைகள்; 
யெகோவாவே, பரிசுத்தமானது நிரந்தர நாளாக 
உமது ஆலயத்தின் அலங்காரமாக இருக்கிறது.