சங்கீதம் 111
 1 அல்லேலூயா, 
செம்மையானவர்களுடைய கூட்டத்திலும் சபையிலும் யெகோவாவை முழு இருதயத்தோடும் துதிப்பேன். 
 2 யெகோவாவின் செய்கைகள் பெரியவைகளும், 
அவைகளில் பிரியப்படுகிற எல்லோராலும் ஆராயப்படுகிறவைகளுமாக இருக்கிறது. 
 3 அவருடைய செயல் மகிமையும் மகத்துவமுமுள்ளது, 
அவருடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும். 
 4 அவர் தம்முடைய அதிசயமான செயல்களை நினைவுகூரும்படி செய்தார், 
யெகோவா இரக்கமும் மனவுருக்கமுமுள்ளவர். 
 5 தமக்குப் பயந்தவர்களுக்கு உணவு கொடுத்தார்; 
தமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் நினைப்பார். 
 6 தேசங்களின் சுதந்தரத்தைத் தமது மக்களுக்குக் கொடுத்ததினால், 
தமது செயல்களின் பெலத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினார். 
 7 அவருடைய கரத்தின் செயல்கள் சத்தியமும் நியாயமுமானவைகள்; 
அவருடைய கட்டளைகளெல்லாம் உண்மையானவைகள். 
 8 அவைகள் என்றென்றைக்குமுள்ள எல்லாகாலங்களுக்கும் உறுதியானவைகள், 
அவைகள் உண்மையும் செம்மையுமாகச் செய்யப்பட்டவைகள். 
 9 அவர் தமது மக்களுக்கு மீட்பை அனுப்பி, 
தமது உடன்படிக்கையை நிரந்தர உடன்படிக்கையாகக் கட்டளையிட்டார்; 
அவருடைய பெயர் பரிசுத்தமும் பயங்கரமுமானது. 
 10 யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; 
அவருடைய கற்பனைகளின்படி செய்கிற அனைவருக்கும் நற்புத்தியுண்டு; 
அவருடைய புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்.