சங்கீதம் 125
 1 யெகோவாவை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் 
சீயோன் மலையைப்போல் இருப்பார்கள். 
 2 மலைகள் எருசலேமைச் சுற்றிலும் இருக்கிறதுபோல், 
யெகோவா இதுமுதல் என்றென்றைக்கும் 
தம்முடைய மக்களைச் சுற்றிலும் இருக்கிறார். 
 3 நீதிமான்கள் அநியாயத்திற்குத் தங்களுடைய கைகளை நீட்டாதபடிக்கு, 
துன்மார்க்கத்தின் கொடுங்கோல் நீதிமான்களுடைய சொத்தின்மேல் நிலைத்திருக்காது. 
 4 யெகோவாவே, நல்லவர்களுக்கும் இருதயத்தில் செம்மையானவர்களுக்கும் நன்மை செய்யும். 
 5 தங்களுடைய கோணலான வழிகளுக்குச் சாய்கிறவர்களைக் 
யெகோவா அக்கிரமக்காரர்களோடு போகச்செய்வார். 
இஸ்ரவேலுக்கோ சமாதானம் உண்டு.