சங்கீதம் 136
 1 யெகோவாவை துதியுங்கள்; 
அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. 
 2 தேவாதி தேவனைத் துதியுங்கள்; 
அவர் கிருபை என்றுமுள்ளது. 
 3 கர்த்தாதி யெகோவாவை துதியுங்கள்; 
அவர் கிருபை என்றுமுள்ளது. 
 4 ஒருவராக பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்; 
அவர் கிருபை என்றுமுள்ளது. 
 5 வானங்களை ஞானமாக உண்டாக்கினவரைத் துதியுங்கள்; 
அவர் கிருபை என்றுமுள்ளது. 
 6 தண்ணீர்களுக்கு மேலே பூமியைப் பரப்பினவரைத் துதியுங்கள்; 
அவர் கிருபை என்றுமுள்ளது. 
 7 பெரிய சுடர்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள்; 
அவர் கிருபை என்றுமுள்ளது; 
 8 பகலில் ஆளச் சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள்; 
அவர் கிருபை என்றுமுள்ளது. 
 9 இரவில் ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தவரைத் துதியுங்கள்; 
அவர் கிருபை என்றுமுள்ளது; 
 10 எகிப்தியர்களுடைய தலைப்பிள்ளைகளை அழித்தவரைத் துதியுங்கள்; 
அவர் கிருபை என்றுமுள்ளது. 
 11 அவர்கள் நடுவிலிருந்து இஸ்ரவேலைப் புறப்படச்செய்தவரைத் துதியுங்கள்; 
அவர் கிருபை என்றுமுள்ளது. 
 12 வலிமையான கையினாலும் தோளின் பலத்தினாலும் அதைச் செய்தவரைத் துதியுங்கள்; 
அவர் கிருபை என்றுமுள்ளது. 
 13 சிவந்த கடலை இரண்டாகப் பிரித்தவரைத் துதியுங்கள்; 
அவர் கிருபை என்றுமுள்ளது. 
 14 அதின் நடுவே இஸ்ரவேலைக் கடந்துபோகச் செய்தவரைத் துதியுங்கள்; 
அவர் கிருபை என்றுமுள்ளது. 
 15 பார்வோனையும் அவன் சேனைகளையும் 
செங்கடலில் கவிழ்த்துப்போட்டவரைத் துதியுங்கள்; 
அவர் கிருபை என்றுமுள்ளது. 
 16 தம்முடைய மக்களை வனாந்தரத்தில் நடத்தினவரைத் துதியுங்கள்; 
அவர் கிருபை என்றுமுள்ளது. 
 17 பெரிய ராஜாக்களை அழித்தவரைத் துதியுங்கள்; 
அவர் கிருபை என்றுமுள்ளது. 
 18 பிரபலமான ராஜாக்களை அழித்தவரைத் துதியுங்கள்; 
அவர் கிருபை என்றுமுள்ளது.  19 எமோரியரின் ராஜாவாகிய சீகோனை அழித்தவரைத் துதியுங்கள்; 
அவர் கிருபை என்றுமுள்ளது. 
 20 பாசானின் ராஜாவாகிய ஓகை அழித்தவரைத் துதியுங்கள்; 
அவர் கிருபை என்றுமுள்ளது. 
 21 அவர்களுடைய தேசத்தைச் சுதந்தரமாகத் தந்தவரைத் துதியுங்கள்; 
அவர் கிருபை என்றுமுள்ளது. 
 22 அதைத் தம்முடைய ஊழியனாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்திரமாகவே தந்தவரைத் துதியுங்கள்; 
அவர் கிருபை என்றுமுள்ளது. 
 23 நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; 
அவர் கிருபை என்றுமுள்ளது. 
 24 நம்முடைய எதிரிகளின் கையிலிருந்து நம்மை விடுதலை செய்தவரைத் துதியுங்கள்; 
அவர் கிருபை என்றுமுள்ளது. 
 25 உயிரினம் அனைத்திற்கும் ஆகாரம் கொடுக்கிறவரைத் துதியுங்கள்; 
அவர் கிருபை என்றுமுள்ளது. 
 26 பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்; 
அவர் கிருபை என்றுமுள்ளது.