அத்தியாயம் 8
 1 ஆ, நீர் என் தாயின் பால்குடித்த என் சகோதரனைப்போல் இருந்தீரானால், 
நான் உம்மை வெளியிலே சந்தித்து முத்தமிடுவேன்; 
என்னை நிந்திக்கவுமாட்டார்கள். 
 2 நான் உம்மைக் கூட்டிக்கொண்டு, 
என் தாயின் வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோவேன்; 
நீர் எனக்குப் போதிப்பீர், கந்தவர்க்கமிட்ட திராட்சைரசத்தையும், 
என் மாதுளம்பழரசத்தையும் உமக்குக் குடிக்கக்கொடுப்பேன். 
 3 அவருடைய இடதுகை என் தலையின்கீழ் இருக்கும், 
அவருடைய வலதுகை என்னை அணைக்கும். 
 4 எருசலேமின் இளம்பெண்களே! 
எனக்குப் பிரியமானவளுக்கு மனதிருப்தி உண்டாகும்வரை 
நீங்கள் அவளை விழிக்கச் செய்யாமலும் எழுப்பாமலும் இருக்க 
உங்களுக்கு ஆணையிடுகிறேன். 
அன்பு புதுப்பிக்கப்படுதல் 
மணவாளியின் தோழிகள் 
 5 தன் நேசர்மேல் சார்ந்துகொண்டு 
வனாந்திரத்திலிருந்து வருகிற இவள் யார்? 
மணவாளி 
கிச்சிலிமரத்தின்கீழ் உம்மை எழுப்பினேன்; 
அங்கே உமது தாய் உம்மைப் பெற்றாள்; 
அங்கே உம்மைப் பெற்றவள் வேதனைப்பட்டு உம்மைப் பெற்றாள். 
 6 நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும், 
உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும்; 
நேசம் மரணத்தைப்போல் வலிமையானது; 
நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடியதாக இருக்கிறது; 
அதின் தழல் அக்கினித்தழலும் அதின் சுடர் கடும் சுடரொளியுமாக இருக்கிறது. 
 7 திரளான தண்ணீர்கள் நேசத்தை அணைத்துவிட முடியாது, 
வெள்ளங்களும் அதைத் தணிக்கமுடியாது; 
ஒருவன் தன் வீட்டிலுள்ள சொத்துக்களையெல்லாம் நேசத்திற்காகக் கொடுத்தாலும், 
அது முற்றிலும் அசட்டைசெய்யப்படும்* 8:7 அவன் முற்றிலும் அசட்டைசெய்யப்படும். 
மணவாளியின் சகோதரன்  
 8 நமக்கு ஒரு சிறிய சகோதரி உண்டு, 
அவளுக்கு மார்பகங்கள் இல்லை; 
நம்முடைய சகோதரியைக் கேட்கும் நாளில் அவளுக்காக நாம் என்ன செய்வோம்? 
 9 அவள் ஒரு மதிலானால், 
அதின்மேல் வெள்ளிக்கோட்டையைக் கட்டுவோம்; 
அவள் கதவானால், கேதுருப்பலகைகளை அதற்கு இணைப்போம். 
மணவாளி 
 10 நான் மதில்தான், 
என் மார்பகங்கள் கோபுரங்கள்; 
அவருடைய கண்களில் இரக்கம் பெறலானேன். 
மணவாளன் 
 11 பாகால் ஆமோனிலே சாலொமோனுக்கு ஒரு திராட்சைத்தோட்டம் உண்டாயிருந்தது, 
அந்தத் தோட்டத்தைக் காவலாளிகள் வசத்திலே அதின் பலனுக்காக, 
ஒவ்வொருவன் ஆயிரம் வெள்ளிக்காசுகளைக்† 8:11 கிராம வேலைக்காரனின் ஒரு நாள் கூலி கொண்டுவரும்படி விட்டார். 
 12 என் திராட்சைத்தோட்டம் எனக்கு முன்பாக இருக்கிறது; 
சாலொமோனே! உமக்கு அந்த ஆயிரமும், 
அதின் பழத்தைக் காக்கிறவர்களுக்கு இருநூறும் சேரும். 
 13 தோட்டங்களில் குடியிருக்கிறவளே! 
தோழர்கள் உன் சத்தத்தைக் கேட்கிறார்கள்; 
நானும் அதைக் கேட்கட்டும். 
மணவாளி 
 14 என் நேசரே! விரைவாக வாரும், 
கந்தவர்க்கங்களின் மலைகள்மேல் உள்ள 
வெளிமானுக்கும் மான் குட்டிக்கும் சமானமாக இரும்.
*அத்தியாயம் 8:7 8:7 அவன் முற்றிலும் அசட்டைசெய்யப்படும்
†அத்தியாயம் 8:11 8:11 கிராம வேலைக்காரனின் ஒரு நாள் கூலி