சங்கீதம் 114
 1 இஸ்ரவேல் எகிப்திலும், யாக்கோபின் வீட்டார் அந்நிய மக்களிடமிருந்து புறப்பட்டபோது, 
 2 யூதா அவருக்குப் பரிசுத்த இடமும், 
இஸ்ரவேல் அவருக்கு இராஜ்ஜியமுமானது. 
 3 கடல் கண்டு விலகி ஓடினது; 
யோர்தான் பின்னிட்டுத் திரும்பினது. 
 4 மலைகள் ஆட்டுக்கடாக்களைப்போலவும், 
குன்றுகள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளினது. 
 5 கடலே, நீ விலகியோடுகிறதற்கும்; 
யோர்தானே, நீ பின்னாக திரும்புகிறதற்கும்; 
 6 மலைகளே, நீங்கள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்; குன்றுகளே, 
நீங்கள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளுகிறதற்கும், 
உங்களுக்கு என்ன வந்தது? 
 7 பூமியே, நீ ஆண்டவருக்கு முன்பாகவும், 
யாக்கோபுடைய தேவனுக்கு முன்பாகவும் அதிரு. 
 8 அவர் கன்மலையைத் தண்ணீர் குளமாகவும், 
கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார்.